
கடலை ரசிக்கச் சென்றேன்- இறுதியில்
கடல் மணலில் காதலியின் பெயர் எழுதி
அவளை சுவாசித்திருந்தேன்,
கடற்கரை தென்றலைவிட
மெல்லினமாய் வீசியது அவள் நினைவுகள்,
அவள் மீண்டும்
எனைச் சேர 14 நாட்கள்,
நான் ராமனானேன்
காதல் வாசம்,
ஒரு வகையில் ராமர்
கொடுத்து வைத்தவர்
மனைவியுடன் வனவாசம் சென்றார்.

0 comments:
Post a Comment